MONEY (Millionaire) / கோடீஸ்வரரா! லட்சாதிபதியா!!

   

இன்றைய நாகரீக உலகில் பணம் தான் பிரதானம் மற்றெல்லாம் அதன் பின்னாலே தான் பணம் பந்தியிலே - குணம் குப்பையிலே பணம் இல்லாதவன் பிணத்திற்க்கு சமம் என்ற பழமொழிகள் எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் உண்மையானவை எனத்தான் தோன்றுகிறது. ஆனாலும் வாழ்க்கை என்பதே பணம் தேடுவது மட்டும் தான் என்று பலர் நினைக்கிறார்கள். இதற்கு மனம் தான் காரணம். மனம் என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது. மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் இருப்பதில்லை. மனத்தைப் பெற்ற மனிதன் நல்லவழியிலோ அல்லது தீயவழியிலோ பணத்தை சம்பாதித்து விட வேண்டும் என நினைக்கிறான் ஆனால் அவன் நினைப்பதெல்லாம் நடைபெறுவதில்லை மனம் நினைப்பது நடந்து விட்டால் தெய்வமேது. வாழ்க்கையில் நமக்கு முன் வினைப்பயனாக கிடைப்பது பிராப்தம் அது தான் விதி. முற்பிறவியில் செய்த நல்வினை-தீவினைக் கேற்ப்ப இவ்வுலக வாழ்க்கைத் தரம் அமைகிறது. இதைத் தாக் FREE WILL என்கிறோம்.
     நாம் வாழ்க்கையில் எதைச் சாதிக்கிறோம் என்பதை மாற்ற முடியாது அதுதான் விதி. அதை இவ்வாழ்க்கையில் நடைமுறையில் எந்த விதத்தில் அவைகளை சந்திக்கிறோம், அதை எப்படி சந்தித்து மாற்றுகிறோம் என்பது ஒவ்வொருவரின் விடாமுயற்சியிலே இருக்கிறது.
எந்த விதத்தில் சந்தித்தால் அவைகளை வெற்றி பெறலாம். அல்லது தோல்வி அடையாமலாவது இருக்கலாம் எனக் கூறுவதே ஜோதிடம் என்னும் தெய்வீகக் கலையாகும்.
     "முன்னவனே முன்நின்றால் முடியாத பொருள் உளதோ" என்றார்கள் பெரியோர்கள் அப்படிப்பட்ட பாக்கியம் பெற்றவர்களா அந்தப் பாக்கியங்களினால் நீங்களும் கோடீஸ்வரர்களா அல்லது லட்சத்துக்கு அதிபதிகளா என்பதை ஜோதிடத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

செல்வத்தைக் குறிக்கும் ராசிகளும், கிரகங்களும்:

2மிடம்:
     செல்வத்தைப் பொருத்து அனைத்தும் தரும் இடமாகும் இதன் அதிபதி செல்வத்தை தேடித்தருவதற்கு துணை நிற்கும் கிரகமாகும் இதில் இருக்கும் கிரகம் செல்வத்தை தந்து கொண்டே இருப்பவர். செல்வத்தால் நேரடியாக எதையும் பெற முடியாது. அதை வேறு ஒரு பொருளாக மாற்றினால் தான் அதன் வழியாக இன்பம் பெறலாம். அதனால் மகிழ்ச்சி அடையலாம் அதற்குண்டான இடம் தான் இது. முன்னவனின் அருள்பெறும் வீடு செல்வம் பெற தன்னால் ஆன முயற்சி - அதனால் பெறும் கல்வி - பெற்ற செல்வத்தை தான் மட்டும் அனுபவிக்காமல் மற்றவருக்கும் கொடுக்கும் கொடை வள்ளல் தன்மை - அதைக் கொடுப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி - சென்ற பாதையில் செய்து வந்த புண்ணியத்தால் நடக்கும் வழித்தடத்தில் நல்லவைகளையே சந்திக்கவும் - செல்ல இருக்கும் பாதையிலே அதிஷ்டம் என்னும் பொற் கலசத்தை அள்ளித்தருமா என்பதையும் உணர்த்தும் இடமாகும்.
5மிடம்:
     சென்ற பிறவியிலே பெற்ற புண்ணியங்களின் தன்மையைக் குறிக்கும் இடம் உழைப்பினாலே பெறுகின்ற செல்வமே சிறந்தது என்கிறார்கள். ஆனால் உழைப்பின்றி ஊதியம் பெறுவதற்க்கான இடம் இது தான். 'அதிர்ஷ்டம்' என்பது இந்த இடத்தைப் பொறுத்தது தான். சூதாட்டத்தில் வெற்றி. ரேஸில் பெரும் பணமாக பெறும் யோகம் ஓரே நாளிலே கோடீஸ்வராகும் அதிர்ஷ்டம் அது தான் பரிசு சீட்டில் பணமாக கொட்டும் யோகம் - செல்வத்தை பெறுவதற்க்கான முயற்சி இவைகளை குறிக்கும் இடம்.
6மிடம்:
     ஒருவருடைய உத்யோகம், மற்றவர்களிடம் பணி செய்யும் நிலை - பணி புரிபவர்கள் இவர்களால் பெரும் செல்வத்தைக் குறிக்கும் இடம்  - தொழில் புரிவதால் கிடைக்கும் ஆதாயத்தையும் குறிப்பதாகும்.
7மிடம்: 
     தொழில் வியாபாரம். கூட்டுத் தொழில், வெளிநாட்டில் செய்யும் பணி தொழில் இவைகளால் பெரும் லாபம் இவைகளை குறிக்கும் இடம்.
8மிடம்:
     திருமணத்தால் கிடைக்கும் செல்வம், சுவீகாரம் செல்வத்தால் பெரும் அதிர்ஷ்டம், போட்டி, பந்தயங்களில் பெரும் வெற்றிகளால் பெரும் பரிசுகள் - அதனால் கிடைக்கும் லாபம் - உயில்களால்  பெரும் செல்வம் - இவைகளால் பெரும் அதிஷ்டத்தை குறிக்கும் இடம்.
                                 தொடரும்.....

Comments

Popular posts from this blog

முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா

ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு

விம்சோத்தரி திசை கணிதம் பிரித்தது எப்படி?