MARS DHOSAM / செவ்வாய் தோஷ சாந்தி நீங்களே செய்து கொள்ளலாம்....



திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று தான் முதலில் பார்க்கிறார்கள். செவ்வாய் தோஷம் என்றாலே ஒரு அலர்ஜி மாதிரி ஆகிவிட்டது. ஆண், பெண் இருபாலர் ஜாதகத்தில் லக்னத்திற்க்கு 2-4-7-8-12 ல் செவ்வாய் இருந்தால்-செவ்வாய் தோஷம் என்று சொல்கிறார்கள். லக்னத்திற்கு பார்ப்பது போல் சந்திரனை வைத்தும், சுக்கிரனை வைத்தும் மேற்கண்ட வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் தான் என்று சொல்லப்படுகிறது.
செவ்வாயுடன் குரு, சனி, ராகு, கேதுக்கள் கூடி இருந்தாலும் பார்வை ஏற்பட்டாலும் தோஷ நிவர்த்தியாகிறது.
ஆண், பெண் இருபாலருக்கும் செவ்வாய் தோஷமிருந்து இரு ஜாதகங்களையும் சேர்ப்பது தான் உத்தமம். செவ்வாய் தோஷமுள்ள ஜாதகங்கள் திருமணத்தடை, தாமத திருமணம், திருமணத்திற்க்குப் பின் பிரச்சனைகள் ஏற்படுதலைக் குறிக்கின்றன. ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷமிருந்து திருமணம் கூடி வந்தால்- திருமணத்திற்க்கு முன் செவ்வாய் தோஷ சாந்தி செய்து கொள்வது அவசியம். இதே போல் திருமணத்தில் தடை ஏற்பட்டாலும் தடை நீங்க சாந்தி பரிகாரம் செய்து கொள்ளலாம். செவ்வாய் சேத்திரமான வைத்தீஸ்வரன் கோயிலில் சாந்தி பரிகாரம் முறையாகச் செய்யப்பட்டு வருகிறது. இத்திருத்தலத்திற்க்கு செல்ல முடியாதவர்கள் கீழ்கண்ட பரிகார முறையை தங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். திருமணத்தடை நீங்குவது மட்டுமல்லாது குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும்.

சாந்தி விபரம்

உங்கள் வீட்டில் வடக்கு திசைப் பார்த்து வாழை இலை வைத்து, அதன் மேல், 27 அரச இலை, வைத்து அதன் மேல் துவரை, பருப்பு உளுந்து வைத்து  அதன் மேல் தூபம் வைத்து திரியாக நீங்கள் அணியும் ஆடை நூல் எடுத்து திரியாக்கி, தீபம் ஏற்றி கற்பூரம் காண்பித்து  தீபத்தை முதல் 9 தடவை வலமாகவும், பின் 9 தடவை இடமாகவும் அடுத்து 9 தடவை வலமாகவும் சுற்றி வணங்கவும். தீபத்தை 27 தடவை சுற்றும் போது கையில் வாழைப் பூ வைத்துக்கொண்டு " ஹே அனுக்கிரஹ அங்காரக மூர்த்தியே உன் கருணை வேணும் அதுவே எனக்கு அற்புதங்களைச் செய்யும்" என்று சொல்லி இதயத்தை தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும். கருணா மூர்த்தி செய்வார். உங்கள் முன் தோன்றி கருணை புரிவார். இந்த சாந்தி பரிகாரத்தை செவ்வாய் கிழமை மாலை 3 - 4.30 மணிக்கு ராகு கால வேளையில் செய்ய நலம் தரும். வாழைப்பூ, பருப்பு, பசுவுக்கு கொடுத்து வணங்கவும் ஒரு முறை செய்தாலே போதும் தோஷம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.
பின்குறிப்பு:
இதனை செய்யும் முன் தங்கள் ஜோதிடரிடமோ அல்லது குருவினிடமோ தங்களின் ஜாதகத்தை காண்பித்து அதற்க்குண்டான விளக்கங்கள் பெற்று பின்பு அதற்க்கு தகுந்தார் போல் இப்பரிகாரம் செய்ய தங்களுக்கு உண்டான பலாபலனை கட்டாயம் செய்யும்.
இப்படிக்கு...
ஜோதிடர்.செல்வமுத்துகுமாரசாமி
நாமக்கல்
81222-64293

Comments

Popular posts from this blog

முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா

ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு

விம்சோத்தரி திசை கணிதம் பிரித்தது எப்படி?