GURU ADVISE / குருவிற்க்கு உண்டான பரிகார ஆலோசனைகள்

குரு பெயர்ச்சிக்குரிய யந்திர தாயத்து தேவைப்படுவோர் தொடர்புகொள்ள வேண்டிய  எண்: 

8122264293

ஆலோசனைகள்

குரு திசை, மற்றும் கோசார குருவுக்குள் இருப்பவர்கள் இந்த ஆலோசனைப்படி நடந்தால் நன்மைகள் உண்டாகும்.
  
             வியாழக்கிழமை விரதம் இருப்பது நல்லது தயிர் சாதம் தானம் தருவது சிறப்பு வியாழக்கிழமையன்று ராகு காலத்தில் எதையும் செய்யக்கூடாது. பலன் விபரீதமாக இருக்கும். காயத்ரீயாளர்கள் குரு வார ராகு காலத்தில் அதிஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். இவர்களை இது வெகுவாகவே பாதிக்கும். குரு வாரத்தில் அவரவர் வசதிப்படி முறையாகச் சில மணிகள் மௌனம் இருப்பது நல்லது.
           வெள்ளை நிற ஆடைகள் அணிவது நல்லது. சிவபெருமான் தரிசனம் மேன்மையைத் தரும். இதே போல மகாவிஷ்ணு தரிசனமும் நல்லது. தட்சிணாமூர்த்தி, பஞ்சாட்சரம், குருதாரக மந்திரம், ஆஞ்சநேய கவச மந்திரம், தங்கள் ஆச்சார்யாவின் பாதுகாமந்திரங்கள் சிறப்புடையன. இவைகளில் ஏற்றவைகளை மட்டும் செய்யவும். ஜகத்குருவான கிருஷ்ணனின் அஷ்டகத்தை அதிகாலையில் சொல்வது நன்மைக்கு வித்தாகும். குரு காலத்தில் சூரிய உதயத்திற்கு முன் எழுபவர்கள் புத்திசாலிகள், அவர்கள் பணத்தோடு பணம் சேரப் பெற்றவர்களாகவும், புகழோடு புகழ் கூடியவர்களாகவும் உயர்வார்கள்.

பரிகாரங்களால் கிடைக்கும் பலன்கள்

குருக் கிரகத்திற்கு முறைப்படியான பரிகாரங்களைச் செய்தால் நற்பலன்கள் பல நடக்கும். அவற்றில் சிலவற்றை இங்கே நாம் காணலாம்.
  1. சம்பாதிக்கும் பணத்தில் மிச்சம் ஏற்படும். இதை நவநிதிகளில் சேர்த்து சுகமாக வாழலாம்.
  2. கல்வி அறிவு மேலோங்கும். ஒரு சிலர் ஆசிரியப் பதவிகள் ஏற்பார்கள். சிலர் கல்வி நிலையங்கள் அமைப்பார்கள்.
  3. தெய்வ காரியங்களான தேர், தெப்பம், பல்லக்கு போன்றவற்றைப் பலர் துணையுடனோ, தனியாகவோ செய்யும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும்.
  4. கோபூஜை செய்தல், பசுமாடுகளை வாங்குவது, கோசாலை அமைத்தல்,கோசம்ரக்ஷணம் பற்றிப்பேசுவது, இரவில் பசுவின் பால் அருந்துவது போன்ற கோ சம்பந்தமான செயல்கள் நடக்கும். சுரபி மந்திரம் ஜெபித்து சித்தியடைவது கண்கூடாகும்.
  5. சொந்த வீடு கட்டுவது நடக்கும். வெளி மனிதர்களுக்குப் பங்களாக்கள் கட்டி தருவது, அல்லது அதை அமைக்கும் விதம் அழகு 'வடிவமைப்பு' பற்றி நல்ல ஆலோசனைகள் கூறுவது மூலம் புகழ் பெறுவர்.
  6. தங்கள் வீட்டில் ஊஞ்சல் அமைத்து அதில் உல்லாசமாக அமர விரும்புவர். நண்பர்கள் வீட்டில் ஊஞ்சல் அமைக்க ஆலோசனை கூறுவதும் நடக்கும்.
  7. ஈட்டும் பணத்தை பெருக்கும் வழி பற்றி யோசித்து நல்ல முடிவிற்கு வர முடியும். பணத்தை மேலும் பெருக்குவதற்கு ஏதுவாக அதை நல்ல நிதிகளில் சேர்ப்பர். ஒரு சிலர் சீட்டுக் கம்பெனிகள் துவங்கி நடத்தும் வாய்ப்பைப் பெறுவர்.
  8. நீண்ட நாட்களாக வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணக்காரர்கள் உதவி கிடைக்கும்.
  9. புதிய பொருட்கள் வீட்டில் சேரும். புஷ்பராகக்கல் ஒரு சிலருக்கு வாங்கும் யோகம் கிட்டும். நகை வியாபாரம், தங்கம், வெள்ளி வியாபாரம் நன்றாக நடக்கும்.
  10. குடும்பத்திற்கு வர வேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பொருளாதார நிலை சீராகும். பால் பண்டங்கள், தயிர் அன்னம் உண்ணல், இனிய தின்பண்டங்கள் அடிக்கடி உட்கொள்ளல் போன்றவைகளும் நடக்கும்.
  11. தெய்வங்களுக்கான தேர், தெப்பம் செய்யும் யோகம் கிட்டும். அரசாங்க சன்மானங்கள், பட்டங்கள் கிடைக்கும். அரசாங்கப் பதவிகள் கிடைக்கும். பொது மக்கள் ஆதரவும் பேச்சு வன்மையும் கை கூடும்.
  12. நல்லறிவு தரும் நூல்கள் கற்றல், சுவையான இலக்கியங்கள் படித்தல், ஜோதிடம், தர்க்கம், மந்திர சாஸ்திர அறிவு மேலோங்கும்.  புண்ணிய க்ஷேத்திர தரிசனம், தீர்த்தக் கரைகளில் ஜெபம் செய்தல், புனித நீராடல், தானங்கள் வழங்கள், பிதுர் காரியங்கள் செய்தல், கர்ம அனுஷ்டானங்களில் மனம் திடம் அடைதல் நடக்கும்.
  13. சிவபெருமானை வழிபட்டு நல்ல சம்பத்துக்களைத் தேடி மகன், பேரன் வரை நிலைக்கும் படி சேமித்து வைத்தல். கோவில்களிலும் தெருக்களிலும் விளக்குகள் போட்டு மகிழ்ச்சியடைதல்.
தங்கள் குருவருளும் - குலகுருவருளும் - பிரகஸ்பதி குருவருளும் பரிகார பலனைப் படிப்பவர்கள் அடைவார்கள். மனதில் தைரியமும், சந்தோஷமும் உண்டாகும்.

Comments

Popular posts from this blog

முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா

ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு

விம்சோத்தரி திசை கணிதம் பிரித்தது எப்படி?