Posts

Showing posts from 2017

கல்யாணத்தை நிர்ணயிக்கும் கட்டங்கள் எவை?

Image
  திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களின் பிரதான நோக்கமே திருமணம் வழியான வம்ச விருத்தியில்தான் இருக்கிறது. மணவாழ்க்கை சிலருக்கு மிக எளிதாக கூடி வந்து விடும். ஒரு சிலருக்கு சிறிது முயற்சி களின் மூலம் நடக்கிறது. பலருக்கு கிரகதோஷ அம்சங்களால் பல ஜாதகங்களை பார்த்து பிரம்மப் பிரயத்தனம் செய்த பிறகு தான் திருமண பந்தம் கூடி வருகிறது. திருமணம் என்றவுடன் பிள்ளையார்சுழி போடுவதுபோல் முதலில் நிற்பது ஜாதகம்தான். கல்யாணப் பேச்சை எடுத்ததுமே. ஜாதகம் பார்த்தாச்சா? கிரக பலன் என்ன சொல்லுது. தோஷம் இருக்கா என்று உற்றார், உறவினர், நண்பர்கள் என மாறி மாறி கேட்பார்கள்.  சிலருக்கு திருமண பிராப்தம் கூடிவராமல் பிரம்மச்சாரிகளாகவும், முதிர் கன்னிகளாகவும் வாழ்க்கை நடத்துகிறார்கள். எல்லா வகையிலும் முயற்சி செய்தாகி விட்டது. பலவகைகளில் ஜோதிடமும் பார்த்தாகி விட்டது. பல முறை குருபலன் வந்து போய் விட்டது. பல கோயில்கள் சுற்றியும், பரிகார பூஜைகள் செய்தும் கல்யாண யோகம் இன்னும் கூடி வரவில்லை என எத்தனையோ பேர் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள்.

MONEY (Millionaire) / கோடீஸ்வரரா! லட்சாதிபதியா!!

Image
    இன்றைய நாகரீக உலகில் பணம் தான் பிரதானம் மற்றெல்லாம் அதன் பின்னாலே தான் பணம் பந்தியிலே - குணம் குப்பையிலே பணம் இல்லாதவன் பிணத்திற்க்கு சமம் என்ற பழமொழிகள் எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் உண்மையானவை எனத்தான் தோன்றுகிறது. ஆனாலும் வாழ்க்கை என்பதே பணம் தேடுவது மட்டும் தான் என்று பலர் நினைக்கிறார்கள். இதற்கு மனம் தான் காரணம். மனம் என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது. மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் இருப்பதில்லை. மனத்தைப் பெற்ற மனிதன் நல்லவழியிலோ அல்லது தீயவழியிலோ பணத்தை சம்பாதித்து விட வேண்டும் என நினைக்கிறான் ஆனால் அவன் நினைப்பதெல்லாம் நடைபெறுவதில்லை மனம் நினைப்பது நடந்து விட்டால் தெய்வமேது. வாழ்க்கையில் நமக்கு முன் வினைப்பயனாக கிடைப்பது பிராப்தம் அது தான் விதி. முற்பிறவியில் செய்த நல்வினை-தீவினைக் கேற்ப்ப இவ்வுலக வாழ்க்கைத் தரம் அமைகிறது. இதைத் தாக் FREE WILL என்கிறோம்.      நாம் வாழ்க்கையில் எதைச் சாதிக்கிறோம் என்பதை மாற்ற முடியாது அதுதான் விதி. அதை இவ்வாழ்க்கையில் நடைமுறையில் எந்த விதத்தில் அவைகளை சந்திக்கிறோம், அதை எப்படி சந்தித்து மாற்றுகிறோம் என்பது ஒவ்வொருவரின் விடாமுயற்சியிலே இருக்

PREVENTION IS BETTER THAN CURE / வருமுன் காப்போம்-விபத்தைத் தடுப்போம்

Image
இன்றைய விஞ்ஞான உலகில் பயணங்கள் மிகவும் எளிதாகவும், விரைவாகவும், எவ்வளவு எளிதானதோ அவ்வளவு ஆபத்தாகவும் அமைந்துள்ளன. பஸ், ரயில், கப்பல், விமானம் என நவீன மயமாக்கப்பட்டும் அவைகளால் விரைவிற்கு தகுந்த விபத்துக்களும் ஏற்படுகின்றன. பயணங்களில் ஒன்றாகச் சென்றவர்களின் ஒரு சிலர் மட்டும் பாதிக்கப்படாமல் இருப்பதும் மற்றும் பலர் ஒருவருக்கு அவரது வாழ்க்கைப் பாதையிலே விபத்துக்களை சந்திக்கும் நிலை ஏற்படுமா? அவைகள் எந்தக்கால கட்டத்தில் ஏற்படும். அவற்றிலிருந்து தப்பி பிழைக்கும் பாக்கிய சாலிகளா என்பதை அறிந்து செயல்பட்டால் விபத்திலிருந்து தப்பிக்கலாமே. "ஜாதகத்தில் வழி இருந்தால்" விபத்தைத் தடுத்து வருமுன்காத்து கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக சனி- செவ்வாய்-யுரேனஸ்- சூரியன்- ராகு-கேது- விபத்துக்களுக்கு காரணமான கிரகங்களாகும். 6-8-12 ம் இடங்கள் விபத்துக்களைகுறிக்கும் வீடுகளாகவும் அமைகின்றன. 4-மிடம், அதன் அதிபதி - சுக்கிரன் வாகனங்களை குறிப்பதாகவும் 3 மிடம் சிறுதூரப்பயணங்களையும் 9ம் இடம் நீண்ட தூரப் பயணங்களையும் குறிப்பதாகவும் அமைந்துள்ளன. கீழ்கண்ட கிரக சேர்க்கைகள் ஒருவருக்க

LORD PERUMAL / திருமாலின் அவதாரங்கள் மொத்தம் எத்தனை?

Image
உலக நலனுக்காகத் திருமால் எடுத்த அவதாரங்கள் மொத்தம் பத்து என்று தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இருபத்திரண்டு அவதாரங்கள் என்று சொல்லப்படுகிறது. அவை: கௌமார, வராக, நாரத, நாராயண, ரிஷப யோகீசுவர, ப்ரிது சக்கரவர்த்தி, மத்ஸ்ய, கூர்ம, தன்வந்தரி, மோகினி, நரசிம்ம, வாமன, பரசுராம,  ராம, வேதவியாச, பலராம,  கிருஷ்ண, பௌத்த, கல்கி அவதாரம்... இவற்றுள், தசாவதாரம் எனப்படும் பத்து அவதாரங்கள்தான் மிகச் சிறப்பானவை. ஆகவே பகவான் இத்தனை அவதாரங்கள்தான் எடுப்பார் என்று நாம் கணித்துச் சொல்ல முடியாது............

GOVERNMENT JOB / அரசு உத்தியோகம் அமையும் யோகம் பற்றி....

Image
http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/Recruitment அரசு உத்தியோகம் அமையும் யோகம் நமக்கு உண்டா? என்பதை அனைவரும் அறிந்து கொள்ள இதோ இந்த பதிவு உபயோகமானதாக அமையும்: மாணவர்களான அனைவரும் கல்வியை கடமையாக கொண்டு படித்து வரும் இந்த சமயத்தில் இந்த பதிவு அவர்களுக்கு ஒரு வழிகாட்டி போல பாதையை ஏற்படுத்தி தரக்கூடும் என நம்புகிறேன். அரசு உத்தியோகத்திற்க்கு முதலில் கல்வி தகுதி தேவை அந்த கல்வியைக் குறிக்கும் பாவம் பற்றி முதலில் கவனிப்போமாக. கல்வியை குறிக்கும் பாவங்கள்(இடங்கள்): உயர்நிலைப்பள்ளிக் கல்வி:- (+2, SSLC, Metric) 3,4,5-ம் இடங்கள் அதன் அதிபதிகள் அந்த இடத்தில் இருக்கும் கிரகங்கள், கல்விக்கு அதிபதியாகிய புதன், இவைகளின் பலத்தால் ஒருவர் உயர்நிலைக்கல்வி பெறலாம். உயர்கல்வி:- (கல்லூரிப் பட்டம்) 2,3,4,5-ம்  இடங்கள் அதன் அதிபதிகள் அந்த இடத்தில் இருக்கும் கிரகங்கள், கல்விக்கு அதிபதியாகிய புதன், இவர்களின் பலத்தால் ஒருவர் பட்டப்படிப்பு கல்வி கற்கலாம். ஆராய்ச்சித் துறையில் பட்டப்படிப்பு:- (M.SC, MA, M.Phil) 2,3,4,5-ம்  இடங்கள் அதன் அதிபதிகள் அந்த இடத்தில் இருக்கும் கிரகங்கள், மேலும் 9,10ம்

GURU ADVISE / குருவிற்க்கு உண்டான பரிகார ஆலோசனைகள்

Image
குரு பெயர்ச்சிக்குரிய யந்திர தாயத்து  தேவைப்படுவோர்  தொடர்புகொள்ள வேண்டிய   எண்:   8122264293 ஆலோசனைகள் குரு திசை, மற்றும் கோசார குருவுக்குள் இருப்பவர்கள் இந்த ஆலோசனைப்படி நடந்தால் நன்மைகள் உண்டாகும்.                 வியாழக்கிழமை விரதம் இருப்பது நல்லது தயிர் சாதம் தானம் தருவது சிறப்பு வியாழக்கிழமையன்று ராகு காலத்தில் எதையும் செய்யக்கூடாது. பலன் விபரீதமாக இருக்கும். காயத்ரீயாளர்கள் குரு வார ராகு காலத்தில் அதிஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். இவர்களை இது வெகுவாகவே பாதிக்கும். குரு வாரத்தில் அவரவர் வசதிப்படி முறையாகச் சில மணிகள் மௌனம் இருப்பது நல்லது.            வெள்ளை நிற ஆடைகள் அணிவது நல்லது. சிவபெருமான் தரிசனம் மேன்மையைத் தரும். இதே போல மகாவிஷ்ணு தரிசனமும் நல்லது. தட்சிணாமூர்த்தி, பஞ்சாட்சரம், குருதாரக மந்திரம், ஆஞ்சநேய கவச மந்திரம், தங்கள் ஆச்சார்யாவின் பாதுகாமந்திரங்கள் சிறப்புடையன. இவைகளில் ஏற்றவைகளை மட்டும் செய்யவும். ஜகத்குருவான கிருஷ்ணனின் அஷ்டகத்தை அதிகாலையில் சொல்வது நன்மைக்கு வித்தாகும். குரு காலத்தில் சூரிய உதயத்திற்கு முன் எழுபவர்கள் புத்திசாலிகள், அவர்கள

BUSINESS MAN / ஜாதகத்தில் வியாபாரம்

Image
ஜாதகத்தில் வியாபாரம் இன்று மக்கட் சமூகத்தில் பெரும்பாலோர் வியாபாரம் செய்வதிலேயே அதிக நாட்டம் செலுத்துகின்றனர். அரச உத்தியோகத்தார், செல்வந்தர், பாமரர் ஆகிய பலதிறத்தினரும் வியாபாரத்தை முழுநேர உழைப்பாகவோ அல்லது பகுதி நேர உழைப்பாகவோ அல்லது பகுதி நேர உழைப்பாகவோ கருதிச் செயற்படுகின்றனர். ஆனால் எல்லோரும் இத்துறையில் வெற்றி பெறுவர் எனத்துணியவியலாது.  இவர் வியாராத்தில் முனைப்போடு ஈடுபட்டுப் பெருநிதி ஈட்டவும் பலர் எதிர் பாராத வகையில் முதல் இழந்து பலவகை கஷ்டங்களையும் எதிர் நோக்குகின்றனர். இதற்கு காரணம் ஜாதகத்தில் வியாபாரத்தை குறிக்கும் கிரக நிலைகள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திருப்பதுதான்.  ஆதலால் வியாபார தொழிலில் ஈடுபட விரும்புவோர் முதற்கண் தமது ஜாதகத்தை சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். அதாவது ஜாதகத்தில் அத்தைகைய தொழில் முயற்சிக்குப் பயன் உண்டா? இல்லையா? என்பதைத் தீர்மானித்துக் கொள்வது அவசிய கடமையாகும். வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற ஜாதகத்தில் இலக்கினம், சந்திரன், சூரியன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்கள் பலம் பொருந்தி இருக்க வேண்டும். அன்றியும் 2,4,7,10,11,12-ம் இடங்களின் பலமு

LORD MURUGAN / சத்ரு சங்கார வேற்பதிகம்

Image
உ   ஸ்ரீ கணேசாய நம : ஸ்ரீ குமார குருதாஸ சுவாமிநே   நம: காப்பு சண்முகக் கடவுள் போற்றி ! சரவணத்(து) உதித்தோய் போற்றி! கண்மணி முருகா போற்றி ! கார்த்திகை பாலா போற்றி! தண்மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி ! விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி ! போற்றி !! நூல் அப்பமுடன் அதிரசம் பொரிகடலை துவரை வடை அமுது செய் இபமுகவனும் ஆதிகேசவன் இலட்சுமி திங்கள் தினகரன் அயிராவதம் வாழ்கவே ! முப்பத்து முக்கோடி வானவர்கள் இடர்தீர முழுது பொன்னுலகம் வாழ்க! மூவரொடு கருட கந்தருவர் கிம்புருடரும் முதுமறைக் கிழவர் வாழ்க ! செப்பரிய இந்திரன் தேவி அயிராணிதன்    திருமங்கலம் வாழ்கவே ! சித்த வித்யாதரர் கின்னரர்கள் கனமான தேவதைகள் முழுதும் வாழ்க ! சப்தகலை விந்துக்கும் ஆதியாம் அதிரூப சரஹணனை நம்பினவர் மேல் தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே. ( 1)  சித்தி சுந்தரி கெளரி அம்பிகை க்ருபாநிதி சிதம்பரி சுதந்தரி பர சிற்பரி சுமங்கலி நிதம்பரி விடம்பரி சிலாசுதை விலாச விமலி குத்து திரிசூலி திரிகோணத்தி ஷட்கோண குமரி கங்காளி ருத்ரி குல